எடப்பாடியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்கு பா.ஜ. கனவு காண வேண்டாம் இரா.முத்தரசன் பேட்டி

1 Min Read

மன்னார்குடி, ஆக.3- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று முன்தினம் (1.8.2025)  அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முறையாக செயல்பட்டு வரும் எங்களை பார்த்து அரசியல் பேசுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இவரும் அரசியல்வாதி தானே. ஒரு அரசியல்வாதி அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவார்?

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், மேனாள் முதலமைச்ச ராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், எதை பேச வேண்டும் என்பதை கூட எண்ணி பார்க்காமல், தனது தகுதிக்கேற்ப பேசாமல் நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசுகிறார்.

இது அரசியல்வாதிக்கு நல்லது அல்ல. பாஜவின் கைப்பாவையாக எடப்பாடி மாறியதை
அ.தி.மு.க.வினர் ஏற்க வில்லை.

அவர் மட்டும்தான் பாஜவுக்கு ஆதரவாக உள்ளார். எடப்பாடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என பாஜ கனவு காண வேண்டாம்.

நமது நாட்டின் முக்கிய பதவியான தேர்தல் ஆணையத்திற்கு, ஆணைய தலைவர் பதவிக்கு மோடியும், அமித்ஷாவும், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்து கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *