துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கேரள ஆளுநர் – முதலமைச்சர் இடையே மீண்டும் மோதல்

1 Min Read

திருவனந்தபுரம், ஆக.2 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணைவேந்தர்களை ஆலோசிக்காமல் ஆளுநா் நியமனம் செய்ததாகவும், இந்த நியமனத்தை ஆளுநா் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளாா்.

கேரள மாநில எண்ம பல்கலைக்கழகத் துக்கு சிஜா தாமஸையும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கே.சிவபிரசாதையும் தற்காலிக துணைவேந்தர் களாக ஆளுநா் ஆா்லேகா் நேற்று (1.8.2025) மீண்டும் நியமித்தாா்.

உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை விளக்கமளித்தது.

இதனிடையே, இந்த நியமனங்கள் பல்கலைக்கழக சட்டத்துக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எதிராக உள்ளதால் இதனை திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுநருக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதினாா்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நிரந்தர துணை வேந்தர்களை மாநில அரசுடன் ஆலோசித்துதான் நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடா்பாக ஆலோசனை நடத்த மாநில உயா்கல்வி, சட்ட அமைச்சா்களுக்கு நேரம் ஒதுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் தொடா் மோதல் நீடித்ததால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

மாநிலங்களவையின் மய்யப் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா?

காங்கிரஸ் தலைவர்  கார்கே கண்டனம்

புதுடில்லி, ஆக. 2 அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட் டத்தைப் பயன்படுத்தும்போது, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சபையின் மய்யப்பகுதிக்கு வரும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இதை நாங்கள் கண்டிக்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *