ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு ‘யூடியூப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குத் தடை!

1 Min Read

கான்பரா, ஜூலை 31-  ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் யூடியூப் உட்பட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்து வதற்குத் தடை விதிக் கப்படவுள்ளது.

குழந்தைகளின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் அனிக்கா வெல்ஸ், “பத்து குழந்தைகளில் நான்கு பேர் யூடியூப் தளத்தில் தகாத காணொலிகளைக் கண்டதாகத் தெரிவித் துள்ளனர்,” என்று சுட்டிக்காட்டினார். சமூக ஊடகங்கள் பிள்ளைகளின் மன நலனைப் பாதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்து வதற்குத் தடை விதிக்கும் சட்டங்களை இயற்றுவதாக அறிவித்திருந்தது.

அப்போது, வகுப் பறைகளில் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் என்ற அடிப் படையில் யூடியூப் தளத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பான பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி வலியுறுத்தியுள்ளார். புதிய தடை வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *