2,388 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல்!

1 Min Read

சென்னை, ஜூலை 17-  தமிழ்நாட்டில் நடந்த கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியர் களுக்கு அவர்கள் விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிகழ் கல்வியாண்டில் ஆசிரியர் களுக்கான பணி மாறுதல் கலந் தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில், தமிழ் பாடத்தைச் சேர்ந்த 1,544 பேரும், ஆங்கிலம் 2,260 பேரும், கணிதம் 3,190 பேரும், அறிவியல் 2,378 பேரும், சமூக அறிவியல் 1,791 பேரும் என மொத்தம் 11,163 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களில், 2,388 பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணையைப் பெற்றுச் சென்றதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *