வடக்குத்து – அண்ணா கிராமத்தில் சுயமரியாதை இயக்கம்- ‘குடிஅரசு’ இதழ்- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்!

1 Min Read

வடகுத்து, ஜூலை 9 வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் கடந்த 25.6.2025 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் தலைமையில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைக் கழகத் தலைவர் தங்க பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட துணை தலைவர் மணி வேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயசங்கர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், இடிமுழக்கம் இந்திரஜித், முருகன், தீபக்ராஜ், செல்வராஜ், மகளிர் அணி திராவிட மணி, முனியம்மாள், கலைச்செல்வி, சுமலதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ‘‘இயக்கமும் ஏடும் சாதித்தது என்ன?’’ எனும் தலைப்பிலும், விழுப்புரம் முத்துவேல் ராமமூர்த்தி ‘‘தலைவர் கலைஞரின் பன்முகம்’’ எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *