திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பூப்பந்தாட்டப் போட்டியில் சாதனை!

1 Min Read

திருச்சி, ஜூலை 3- திருச்சி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகமும், மணவை பூப்பந்தாட்டக் கழகமும் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி கடந்த 15.06.2025 அன்று, மணப்பாறை, தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் எஸ்.எஸ்.சிறீகிருத்திகா, ஜே.ஆக்னஸ்மேரி, கே.ஜோவிதா,
எஸ்.சிறீமதி, ஆர்.தியா,
எம்.ஹர்ஷிதா,
எம்.கனிஷ்கா, வி.யாழினி, எஸ்.தீக்ஷா,
ஆர்.வைஷ்ணவி உள்ளிட் டோர் பங்கேற்ற அணி மாவட்ட அளவில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

இதில், எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.சிறீமதி திருச்சி மாவட்டத்தின் சார்பில் இம்மாதக் கடைசியில் நடைபெற உள்ள மாநில அளவிலான பூப்பந் தாட்டப் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ள அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *