103ஆம் ஆண்டில் நுழையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

1 Min Read

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராகத் தொண்டு புரியும் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர்களுக்கு இன்று (2.7.2025) 103ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகும்.

வேலூர் பரமத்தி அருகே உள்ள பொத்தனூரில் பிறந்து, மாணவப் பருவம் தொட்டே தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருபவர்.  ‘க.ச.’ என்று அனைத்துக் கட்சியினரும், அனைத்துத் தரப்பினரும் கண்ணியத்தோடும், மரியாதை கலந்த பாசத்தோடும் அவரிடம் பழகுவார்கள்.

அண்மையில் 27.6.2025 அன்று திருச்செங்கோடு நிகழ்ச்சியில்  சந்தித்தபோது தொடக்கக் காலத்தில் இருந்த அதே மகிழ்ச்சி, தொண்டறத் தூய்மை பொங்கும் வகையில் அவர்களை மேடையில் அனைவரும் வாழ்த்தினோம்!

நல்ல உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் உள்ள அவர்கள் அனைவரும் ஏற்று மதிக்கப்படக் கூடிய மாமனிதர் ஆவார். மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, ெகாள்கை வழிகாட்டியாகத் திகழ வேண்டும்.

அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை              

2.7.2025       

குறிப்பு: தொலைப்பேசியில் பொத்தனூர்
க. சண்முகம் அவர்களுக்கு  ஆசிரியர்,   மோகனா அம்மையார், வீ.அன்புராஜ் ஆகியோர் வாழ்த்துக் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *