ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் பாஜக மேனாள் பெண் அமைச்சர் ரேணு குஸ்வாஹா இணைந்திருப்பது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், பாஜக மீது அதிருப்தியில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ஜேடி கட்சியில் ரேணு குஸ்வாஹா இணைந்துள்ளார்.