சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 21 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதற்கான 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18ஆம் தேதி வெளியாகிறது. கலந்தாய்வு ஜூலை 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஆணை ஜூலை 28ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 6ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.