சான்றோர்குப்பம் பெ.புரட்சி இறுதி நிகழ்வில் கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை

1 Min Read

ஆம்பூர், ஜூலை 14- ஒருங் கிணைந்த  வட ஆற்காடு மாவட்ட மேனாள் தலைவர் ஆம்பூர் (சான்றோர் குப்பம்)

ஏ.பெருமாள் அவர்களின் மகள் ஆசிரியர் பெ.புரட்சி  (வயது 77) அவர்கள் 11.06.2025 அன்று இயற்கை எய்தினார்.அம்மையாரின் இறுதி நிகழ்வு  அவரது இல்லம் ஆம்பூர் சான்றோர்குப்பத்தில்  12.06.2025 காலை 10.30  மணிக்கு நடைபெற்றது.

அம்மையார் அவர்கள் தான் வாழும் காலத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் பயணித்து தன்னுடன் வாழ்ந்த மக்களிடையே மூட நம்பிக்கைகள் ஒழிய பெரும் காரணமாக இருந்தவர்.

அம்மையாரின் இறுதி நிகழ்வில் கே. சி. எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், ப.க.),
வி. இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர் வேலூர்),  வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்), ரவி, பன்னீர், ச.ஈஸ்வரி (மகளிரணி), ஏ. டி. ஜி.சித்தார்தன், மு. வெற்றி, வெங்கடேசன், பெ.ரா.கனகராஜ், சி.எ.சிற்றரசன், ஆர். இராஜேந்திரன், க. முருகன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

அம்மையாரின் கண்கள் கொடையாக வழங்கப்பட்டன. இறுதி நிகழ்விற்கு பின்னர் மருத்து வமனைக்கு  உடற் கொடையாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *