பகல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா? – காங்கிரஸ் கேள்வி

1 Min Read

புதுடில்லி, ஜூன் 12- பகல்காம் தாக்குதலுக்கு பிந்தைய பாது காப்பு சூழ்நிலை குறித்து நாடாளு மன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி சம்மதிப்பாரா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது.

தலைமை தாங்குவாரா?

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் அளித்து விட்டு திரும்பிய நாடாளு மன்ற உறுப்பினர்கள்  குழுக்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

இப்போதாவது அவர், அனைத்து அரசியல் கட்சி தலை வர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குவாரா? சீனா, பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் வருங்கால வியூகம் குறித்து தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவாரா?

விளக்கம் அளிப்பாரா?

பகல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டு விட்டது.

இருப்பினும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், பகல்காம் தாக்குதலுக்கு பிந்தைய பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கை சவால்கள் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த பிரதமர் மோடி சம்மதிப்பாரா?

சீனா, பாகிஸ்தான் குறித்து விவாதம் நடத்த 2 முழு நாள்களை பிரதமர் அனுமதிப்பாரா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவதற்கு விளக்கம் அளிப்பாரா?

குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்துவாரா?

மேலும், பகல்காம் தாக்கு தலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்தும் முயற்சி களை இரட்டிப்பாக்குவாரா?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமா?

கார்கில் போர் முடிந்தவுடன், நிபுணர்கள் அடங்கிய கார்கில் மறுஆய்வு குழு அமைக்கப்பட்டது. அது போல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுமா? அக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *