எப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதுதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப் படித்து உங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும். அந்தச் சிந்தனை என்பது பலதையும் கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்கின்ற பகுத்தறிவைத் தூண்டும். அவ்வாறில்லாமல் அறிவு மிகுதியாக வளருவது எப்படி?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’