ஆம்பூர், ஜூன் 9- இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் தியாகராஜன் என்பவர், அதே கோவிலில் தூய்மைப் பணி செய்த இளம் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக தொல்லை செய்ததாக புகார் அளித்தார். .
இதனை அடுத்து, தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் தியாகராஜன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து காவல்துறை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் பணியிலிருந்து அவரை நீக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரை பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல உயர்மட்ட அலுவலகங்களில் சிறப்பு பூஜைகளுக்கு பலமுறை அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது