என்.சி.இ.ஆர்.டி. நூல்களை போலியாகத் தயாரித்து பெருங்கொள்ளை!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 9- என்.சி.இ.ஆர்.டி. எனும்… ஒன்றிய அரசின்… தேசிய பாடநூல் நிறுவனத்தின் சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களை கள்ளப் பாடப் புத்தகம் அச்சடித்து வெளியிட்டு… சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் விற்று பல கோடிகள் சம்பாதித்து விட்டனர்… சமூக விரோதிகள்.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருட்டுப் பாடப்புத்தகங்களையும், ரூ.20 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான அச்சிடும் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களையும்  அவற்றுடன் சட்டவிரோத கள்ளப்பாடப் புத்தகங்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள், ஏராளமான அச்சிடும் தகடுகள் மற்றும் பிற பொருள்களும் என்.சி.இ.ஆர்.டி.யினால் காவல் துறையுடன் சென்று பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்ற சோதனையில் ஏராளமான இயந்திரங்கள், அச்சுத் தகடுகள் மற்றும் திருட்டுப் பாடப்புத்தகங்கள் என்.சி.இ.ஆர்.டி. மூலம் பறிமுதல் செய்யப்பட்டன.

தரமற்ற மட்டிக் காகிதத்தில்… விலை மலிவான மையைக் கொண்டு… நடுவில் சில பாடப் பக்கங்கள் காணாமல்… மட்டமான அட்டையோடு அச்சிடப்பட்ட இந்தப் போலி… கள்ளப் பாடப்புத்தகங்கள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அந்தப் போலிகளை அறியாமல்… ஒரிஜினல் புத்தகங்களோடு ஒப்பிட்டு சரி கண்டு வாங்காமல்… நடந்த மோசடியை அறியாமலேயே அவற்றை வாங்கும் மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பெரிய சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளிகளால் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு என்.சி.இ.ஆர்.டி.  (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) பொறுப்பாகும். என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை அச்சிடும் 135 எம்பனேல்டு அச்சுப்பொறிகளைக் கொண்டுள்ளது. இவர்களை முந்திக்கொண்டு போலிகள்… கள்ளப் பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்து விற்று கொள்ளை இலாபம் ஈட்டி விட்டனர்.

இந்திய அரசாங்கத்திற்கும் என்.சி.இ.ஆர்.டி.க்கும் கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்தியதோடு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது. இந்த ஒன்றிய அரசின் பாடநூல்  மோசடியின் பின்னணியில்… மூளையாக இருப்பவர்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும்… என்னென்ன ஊழல், மோசடி கொடுமைகள் எல்லாம் நடக்கப் போகிறதோ பி.ஜே.பி. ஆட்சியில்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *