வைகை அணையில் இருந்து 15ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

1 Min Read

மதுரை, ஜூன் 8-  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி பாசனத் துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது. இதன்மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர்.

பருவ மழை

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், அணைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர் இருப்பு உயர்ந் துள்ளது. தற்போது நீர் இருப்பது    58.83 அடியாக உள்ளது. இதனால். வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

நீர் வரத்து

வைகை அணை மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ் வாதாரமாக உள்ளது. இதன்மூலம்   5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

நீர் திறப்பு

அதுபோல மதுரை மாநகர குடிநீருக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், வைகை  அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதனால்,  அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.   வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *