பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியல் ஆக்குவதா? பா.ஜ.க.வுக்கு முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

Viduthalai
1 Min Read

பெங்களூரு, ஜூன் 7 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா விமர்சித்துள்ளார்.

11 பேர் பலி

பெங்களூர் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது குறித்து பேசிய சித்தராமையா, “அவர்கள் அரசியலுக்காக இதைச் செய் கிறார்கள். நான் இதில் அரசியல் செய்யவில்லை. வெளிப்படையாகப் பொறுப்பானவர்கள் மற்றும் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நாங்கள் நடவ டிக்கை எடுத்துள்ளோம்.” என்று கூறினார்.

இதற்கிடையில், கருநாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மாநில அரசு அழுத்தம் கொடுக்கப்படும்போது மட்டுமே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அவர், “நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு தான் ஆர்சிபி மற்றும் கருநாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, பெங்களூரு நகர காவல் ஆணையர் உட்பட மூத்த காவல்துறை அதி காரிகள் மற்றும் அய்ந்து அதிகாரி களை முதலமைச்சர் திடீரென பணியிடை நீக்கம் செய்தார்.

ஜூன் 4 அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் ஆணையர் தயானந்தா உட்பட பல அய்பிஎஸ் அதிகாரிகளை கருநாடக காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.

பெங்களூரு கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ், துணை காவல் ஆணையர் சேகர் எச்.டி, உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் கிரிஷ் ஏ.கே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மூத்த அய்பிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங், பெங்களூரு நகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *