கழகக் களத்தில்…!

2 Min Read

8.6.2025 ஞாயிற்றுக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை: காலை 10 மணி* இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை *தலைமை: ஆ.சாந்தி (மகளிரணி மாவட்டத் தலைவர்)* முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்)* வரவேற்புரை: பொன்மேனி ராஜயோகம் (மாவட்ட செயலாளர், மகளிரணி) * சிறப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) * பொருள்: இயக்க இதழ்களின் சந்தா சேர்க்கை, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு, இயக்க வெளியீடுகள் பரப்புதல் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், செயல் திட்டங்கள்* நன்றியுரை: தி.ராஜலெட்சுமி (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை) *விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, விருதுநகர் மாவட்டம்.

கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

நாகர்கோவில்: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்)* வரவேற்புரை: மு.ராசசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்)*நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: சி.கிருஷ்னேசுவரி (காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணை தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் நாகர்கோவில் வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இயக்க வளர்ச்சிப் பணிகள்.

9.6.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – நூல் ஆய்வுத் தொடர் பொழிவு-4

சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்)* திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்).

14.6.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 10ஆவது மாதாந்திர கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி* இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: வை.தேனரசன் – தலைப்பு: பெரியார் வழியில் கலைஞர் * நன்றியுரை: அரங்க வேலாயுதம் (செயலாளர், ஆலத்தூர் ஒன்றியம்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *