பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்பனை பா.ஜ.க. நிர்வாகி உள்பட 5 பேர் கைது

Viduthalai
1 Min Read

திண்டுக்கல், ஜூன் 25- பட்டி வீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கருங்குளம் கண்மாய் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வ தாக பட்டிவீரன்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல்துறை துணை ஆய்வாளர் முத்தையா தலைமையிலான காவலர்கள் அங்கு ரோந்து சென்றனர். அப் போது காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அவர்களை காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், சித்த ரேவு அமைதிபூங்கா பகுதியை சேர்ந்த கார்த்திகை ராஜா (வயது 39), நெல் லூரை சேர்ந்த சவுந்தர பாண்டியன் (29), திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (53), பட்டி வீரன்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் (47) உள்பட 5 பேர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவலர்கள் கைது செய் தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட் டார் சைக்கிள்கள், ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சுரேஷ்குமார், வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய பா.ஜ.க. வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *