மார்ச் 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

Viduthalai
1 Min Read

மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த மார்ச் 1 முதல் தொடங்கும் எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் அதனுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும், ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பனியால் பாதிக்கப்படும் லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் அக்டோபரிலேயே செயல்பாடுகள் தொடங்கிவிடும். நாடு முழுவதும் 2 கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021இல் நடக்கவேண்டிய கணக்கெடுப்பு கரோனாவால் தள்ளிப்போனது.

ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *