ஆளுநர் திருவாய் ‘மலரட்டும்!’

viduthalai
3 Min Read
The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.

‘‘பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரத தேசம் ரிஷிகளாலும், துறவிகளாலும், ஸநாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது’’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

‘‘மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது ஸநாதன தர்மம் மட்டும் தான். சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். உலக நாடுகள் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்த போதெல்லாம், நம் நாடு சரிந்து விழாமல் நிமிர்ந்து நின்றதற்கு காரணம் ஸநாதன தர்மம்.

உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் கேந்திரமாக நம் நாடு திகழ்கிறது.

மனிதகுலம் தழைக்க, ஆன்மீகம் தழைக்க வேண்டும். திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கின்றனர்.

ஸநாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்’’.  இவ்வாறு ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஒருவரை ஒன்றிய பிஜேபி அரசு பொறுக்கி எடுத்து அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டை நம்மால் சீண்ட முடியவில்லை. இந்த ஆர்.என். ரவி என்பவரை நாளும் குட்டிக்கலாட்டா செய்யட்டும் என்று அனுப்பி வைத்து இருக்கிறது.

ஆர்.என். ரவியும் அந்தக் காரியத்தை நாளும் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டு மக்களால் செமத்தையாக வாங்கிக் கட்டினாலும், உறைக்கவில்லை அவருக்கு.

திருவள்ளுவர் நாளில் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் தீட்டி ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் வசைப்பாட்டு கிளம்பியது – அவருக்கு அதெல்லாம் இசைப் பாட்டாகக் குளிர்ந்தது போலும்.

திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதியாம் – ஸநாதனவாதியாம். ஸநாதனம் என்றால் என்ன என்பதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலைப் புரட்டிப் பார்த்தால் பளிச் சென்று புரியும். ஸநாதனம் (வர்ணாசிரமம்) என்கிறது  சங்கராச்சாரி யாரின் தெய்வத்தின் குரல் (முதல் பாகம் 282ஆம் பக்கம்)

திருவள்ளுவரோ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றவர் – வருணாசிரமம் என்பதோ பிறப்பின் அடிப்படையிலானது.

இந்த நிலையில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் விளக்கெண்ணெய்த் தடவி முடிச்சுப்போட முனைகிறார்.

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருள்பால், காமத்துப் பாலைப்பற்றி எழுதினாரே தவிர, ஆர்.என். ரவி வகையாறாக்கள் கூறும் துறவறத்தைப் பற்றிப் பாடவில்லை. அது வெறும் குப்பை என்று தூக்கி எறிந்தார்.

இந்த சித்து வேலை என்னும் பருப்பு எல்லாம் தந்தை பெரியார் பிறந்த திராவிட மண்ணில் வேகாது.

எந்த அளவுக்கு ஆர்.என். ரவி சென்றுள்ளார் என்றால் பகவத் கீதையைப் படித்தால் இயற்பியலில் திறமை அடையலாம் (‘தினமணி’ 5.12.2022) என்று பினாத்துகிறார்.

மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் நோய்கள் எல்லாம் தீரும் என்று ஓர் அய்.அய்.டி. இயக்குநர் கூறவில்லையா!

பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் இல்லை என்பதற்கு இவை எல்லாம் போதாதா?

பல நாடுகள் ஆட்சியாளர்களாலும் ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை; ஆனால் பாரத தேசம் ரிஷிகளாலும் துறவிகளாலும், ஸநாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

அப்படி என்றால் இந்த ரிஷிகளால் சிருஷ்டிக்கப்பட்ட இந்தியாவை வெள்ளைக்காரர்கள் 200 ஆண்டுகள் ஆண்டது எப்படி?

இது போன்ற அறிவார்ந்த கேள்விகளை எல்லாம் ஆர்.என். ரவியிடம் கேட்பது எல்லாம் வீண்தான். அவர்கள்தான் பஞ்சகவ்வியத்தைப் பஞ்சாமிர்தம் என்று சொல்பவர்கள் ஆயிற்றே!

நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சொல்வதுபோல் இதுபோன்ற ஆளுநர்கள் இருந்து நாள்தோறும் உளறிக் கொட்டினால், நாட்டு மக்கள் நமக்கு மேலும் ஆதரவையும், பலத்தையும் கூட்டி, ஆட்சியில் இருக்க வேண்டியது, மீண்டும் வர வேண்டியது தி.மு.க.தான் என்ற உறுதியான முடிவுக்கு வருவார்கள்!

அதுவும் ஒரு வகையில் நல்லது தானே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *