காசாவில் தலைவிரித்தாடும் கடும் உணவு, குடிநீர் பஞ்சம்: உணவு விநியோகத்தை உடனே அதிகரிக்க அய்.நா. வேண்டுகோள்

1 Min Read

காசா, மே 31– காசா மீது இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகளின் உதவிப் பொருட்களை குறைந்த அளவிலேயே காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதிப்பதால் ஒரு வேளை உணவுக்கு கூட மக்கள் போராடும் சூழல் உள்ளது. இந்நிலையில் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரத்தில் உள்ள அய்.நா.வின் நிவாரண முகாமை நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவு, அரிசி, குடிநீர் பாட்டில்களை அவர்கள் அள்ளி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அய்.நா. பாதுகாப்பு காவலர்கள் கூட்டத்தை கலைத்தனர். அய்நா சபையின் நிவாரண முகாமை மக்கள் சூறையாடிய நிலையில் காசாவில் நிலவும் உணவு பஞ்சத்தின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்துவதாக அந்த நிகழ்வூ இருக்கிறது. இந்நிலையில் காசாவில் உணவு பொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க அய்.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *