உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்த போதிலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய சவாலாக இருக்கிறது.
மனிதனின் அத்தியாவசிய மூன்று தேவைகளான உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றை பணம் இருந்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். பணத்தை சம்பாதிக்க வேலைக்கு செல்ல வேண்டும். வேலை என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அங்கம்.
படித்து முடித்த பட்டதாரி இளைஞருக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. நாளுக்கு நாள் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
கரோனா காலத்தில் ஆன்லைன் பள்ளி கல்லூரி வகுப்புகள், ஆன்லைன் பயிற்சி மய்யங்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பணி செய்து வந்தனர்.
புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனை வோர்கள் பலர் இட வசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.
‘முதல்வர் படைப்பகம்’
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர், மாணவிகளும் உள் கட்டமைப்பு வசதியின்றி அவதிப்பட்டனர். அவர்களுக்கு நல் வாய்ப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அகரம் ஜெகன்நாதன் தெருவில் ரூ.2.84 கோடி செலவில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு சார்பில் ‘முதல்வர் படைப்பகம்’ என்று கூறப்படும் ஒரு பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மய்யத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர் பாபு உடனிருந்தார்.
இதில் தொழில் முனைவோர்களுக்கான பகிர்வு பணியிட மய்யப் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், மாணவிகளுக்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய கல்வி மய்யம், உணவு அருந்துவதற்கான இடம் என கணினி, வைஃபை வசதியுடன் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் இயங்கும் ‘முதல்வர் படைப்பகம்’ முதலமைச்சர் சிந்தனையில் உதித்த புதிய திட்டமாகும். அனைத்துத் தளங்களும் ‘குளுகுளு’ வசதி செய்யப்பட்டுள்ளன. மேலும் நல்ல இருக்கை வசதிகள், வைஃபை வசதி, இலவசமாக வழங்கப்படுகிறது. தரைத்தளம் பகிர்ந்த பணியிட மய்யமாக செயல்படுகிறது. இந்த தளத்தில் புத்தாக்க தொழிலைத் தொடங்கியவர்கள். மென்பொருள் உள்ளிட்ட பல தொழிலை தொடங்கியவர்கள், புதிதாக தொழில் தொடங்கி தனி அலுவலகம் இல்லாத நிலையில் உள்ளவர்கள் அங்கு அமர்ந்து அமைதியாக தங்கள் பணிகளை செய்ய முடியும்.
கல்வி மய்யம்
ஒரே நேரத்தில் 38 பேர் இத்தளத்தில் அமர்ந்து தங்கள் வேலைகளைப் பார்க்கலாம். 4 மற்றும் 6 பேர் அமர்ந்து கூட்டங்கள் நடத்தும் வகையில் 3 ஆலோ சனைக் கூடங்கள் உள்ளன.
இந்த பகிர்ந்த பணியிடத்தை ஒருவர் அரைநாள் பயன்படுத்த ரூ.50, ஒரு நாளைக்கு ரூ.100, மாதம் முழுவதும் பயன்படுத்த ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முதல் தளம் கல்வி மய்யமாக செயல்படுகிறது. இங்கு பல்ேவறு போட்டித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர் களுக்கு ஆயிரக் கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்தில் தகவல் தேட 3 கம்ப்யூட்டர்களும் உள்ளன. நாள்தோறும் 5 ஷிப்டுகளில் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ரூ.5 கட்ட ணமாக வசூலிக்கப் படுகிறது. வீட்டில் படிக்கக் கூடிய சூழல் இல்லாத மாணவர்கள் இங்கு ‘முதல்வர் படைப்பகத்தை பயன்படுத்திக் கொள் கிறார்கள்.
காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ‘முதல்வர் படைப்பகம்’ திறந்து இருக்கும். நாள் தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ‘முதல்வர் படைப்பகம்’ வந்து பயிற்சி பெறுகின்றனர்.
2ஆவது தளத்தில் தேநீர் மற்றும் உணவு அருந்தும்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. படித்து முடித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காத பட்சத்தில் சுய தொழில் தொடங்க முடிவு செய்தால் தொடக்கத்தில் தொழில் தொடங்குவதற்கான இடம், இடத்திற்கான வாடகை, மின்சாரக் கட்டணம் அவை யெல்லாம் அவர்களால் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார்கள்.
இது போன்ற புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கு வாடகை பணப் பிரச்சினையில் இருந்து விடுபடும் வகையில் நல்ல சூழ்நிலை இடம், ஏ.சி., இலவச வைஃபை ஆகிய அனைத்து வசதிகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தொழில் முனைவோர்கள் 40 பேர் அமர்ந்து பணி புரியும் வாய்ப்புள்ளது.
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், போட்டி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இது ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.
‘முதல்வர் படைப்ப’கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் பார்த்து பாராட்டினர். அங்கு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர் வீரமணியை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வரவேற்று முதல்வர் படைப்பகத்தை காணும்படி செய்தார்.
தமிழ்நாட்டில் 30 இடங்களில்
‘முதல்வர் படைப்பகம்’
‘முதல்வர் படைப்பகம்’
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர் களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் அடுத்த நிதியாண்டுகளான (2025–2026) நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர் களுக்காக அறிவார்ந்த சூழலில் அமைக்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட் டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய
Co working space, புத்தொழில் முனைவோர்,
அய்.டி. பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும்.
‘முதல்வர் படைப்பகம்’ சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 30 இடங்களில் உருவாக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
‘முதல்வர் படைப்பகம்’ வேலை தேடும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கும் முதன்மை பயனகமாகப் பரிமளிக்கிறது.