பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்கள் இடமாற்றம் அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

1 Min Read

சென்னை, மே 19- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும்.

அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-2026 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமைச்சுப் பணியாளர் களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது. இவற்றில் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல் ஆகியவை மே 26, 29, 30ஆம் தேதிகளில் வழங்கப்பட இருக்கிறது.

அதைத் தொடர்ந்து உதவியாளர் பணியிடத்துக்கு ஜூன் 4ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 6, 9, 11ஆம் தேதிகளிலும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *