அரசுக் கலை கல்லூரிகளில் சேர 1.21 லட்சம் பேர் விண்ணப்பம்

1 Min Read

சென்னை, மே 18- தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. 176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27ஆம் தேதி ஆகும். இதேபோல் பொறியியல் படிப்புக்கான இணையவழி விண் ணப்ப பதிவும் வேகமாக நடந்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங் கிய இந்த விண்ணப்பபதிவில் 15.5.2025 வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 898 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *