கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தமிழ் வார முப்பெரும் விழா

1 Min Read

கோபி, மே 16– 10.5.2025 அன்று காலை 10 மணி அளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் ப.க மாவட்டத் தலைவர் சீனு. தமிழ்ச் செல்வி தலைமையிலும் கோபி மாவட்ட கழக செயலாளர் வே. குணசேகரன் முன்னிலையிலும் வரவேற்புரை ப.க. செயலாளர் திராவிட நிதி ஆற்ற, அரசியல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாள்  விழா உரையினை மாவட்டக் காப்பாளர் ந. சிவலிங்கம் அவர்கள் ஆற்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா உரையினையும் அ.குப்புசாமி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம் ஆற்ற கோபி மாவட்ட ப.க. உறுப்பினர்  பொ.சாந்தியின் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா உரையுடன் ஆசிரியர் சாந்தி இணையர் இருவருக்கும் பயனாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் தந்தை பெரியாரின் படத்தினை  ஆசிரியர் எஸ் எஸ்.மாணிக்கமும் அண்ணல் அம் பேத்காரின் படத்தினை தலைமை ஆசிரியர் ப. செல்லதுரை அவர்களும் நினைவு பரிசாக வழங்கி பெருமைப்படுத்தினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் படத் தினை மாவட்டக் காப்பாளர் இரா. சீனிவாசனும் பாரதிதாசன் படத்தினை ப.க மாநில அமைப் பாளர் தரும.வீரமணியும் தந்தை பெரியாரின் படத்தினை வழக்குரைஞர் மா.கந்தசாமியும் திறந்து வைத்தும்  மாலை அணி வித்தும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பகுத்தறிவாளர்கள் கவுரி சங்கர் சுமி எலக்ட்ரானிக்ஸ்,  நடுப்பாளையம் கந்தசாமி,  பகுத்தறிவு  ஆசிரியர்களான எஸ். எஸ். மாணிக்கம்,  ப. செல்லதுரை, சாம்பான்,  குருநாதன், சின்னச்சாமி, வடிவேல்,  க.சீதாலட்சுமி,  ப. சங்கீதா, பொ.சாந்தி தலைமையாசிரியர் மற்றும் அவரது குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் பொதுக்குழு உறுப்பினர் க. யோகானந்தம், கழகத் தோழர் அந்தியூர் கோவிந்தன், இளைஞர் அணி சூர்யா, எழில், தனபால்,  சி.மதிவதனி,  வே.தாரூக் நிவாஸ்,  த.லிவிஷ்னா, கு.சிறீஹரிணி, தக்ஷின் மற்றும் புதிதாக இணைந்த ப.க தோழர் ஆசிரியர் மாதப்பன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இவ்விழா ப.க  துணைத் தலைவர் க.பழனிச்சாமி அவர்களின் நன்றி யுடன் இனிதே முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *