செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
சென்னை, மே 9- கடந்த 4 ஆண்டுகால மாணவர் சேர்க்கைவிவரங்களை வைத்து பார்க்கும்போது பொறியியல் கல்லூரிக ளுக்கு மவுசு அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.
பொறியியல் படிப்புகள்
பொறியியல் படிப்பு களில் மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2020-2021ஆம் ஆண்டு வரை குறைந்து இருந்தது. இதனால் கல்லூரிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது. அதன்பின்னர், 2021-2022ஆம் கல்வியாண்டில் இருந்து பொறியியல் படிப்புகளில் சேரும் மாண வர்களின் எண்ணிக்கை சற்று உயரத்தொடங்கியது.
2021-2022ஆம் ஆண்டில் இருந்து 2024-2025ஆம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்களை வைத்து பார்க்கையில், மாணவர் சேர்க்கை 2021-2022ஆம் ஆண்டில் 1,28,414, 2022-2023ஆம் ஆண்டில் 1,49,077 பேர், 2023-2024ஆம் ஆண்டில் 1,69,887 பேர், 2024-2025ஆம் ஆண்டில் 1,78,569 பேர் என அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
மாணவர் சேர்க்கை
அதிலும், கடந்த ஆண்டு (2024-2025) மாணவர் சேர்க்கை அதற்கு முந்தைய ஆண்டு களைவிட நன்றாகவே இருந்தி ருக்கிறது. புள்ளி விவரங்களின்படி பார்க் கையில், முந்தைய ஆண் டைவிட 4.82 சத வீதம் மாணவர் சேர்க்கை அதி கரித்திருந்தது.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் ஆகிய துறைகளில் பொறியியல் படித்து முடித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியது போன்றவை அதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது.
மேலும் புதிய பாடப்பிரிவு களும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு உருவாக்கப்படுவ தும், பொறியியல் படிப்பு களில் மாணவர்கள் அதிகம் சேருவதற்கான முக்கிய காரணியாகவும் இருக்கிறது.
கல்வி உதவித்தொகை திட்டங்கள்
இது ஒருபக்கம் இருந்தாலும், பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு ஒன்றிய-மாநில அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்களும் ஒரு காரணமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த கல்வியாண்டில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான உதவித்தொகையாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 125 பேருக்கு ரூ.379 கோடியே 33 லட்சமும் பிரதம மந்திரி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 83 ஆயிரத்து 83 பேருக்கு ரூ.206 கோடியே 5 லட் சமும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 62 ஆயிரத்து 417 பேருக்கு ரூ.6 கோடியே 25 லட்சமும், புதுமைப்பெண் திட்டம் வாயிலாக 48 ஆயிரத்து 612 பேருக்கு ரூ.4 கோடியே 87 லட்சமும், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக் கீடு திட்டத்தின்கீழ் 35 ஆயிரத்து 200 பேருக்கு ரூ.299 கோடியே 46லட்சமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
நடப்பாண்டில் எப்படி இருக்கும்?
நடப்பாண்டிலும் உதவித் தொகை திட் டங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் அதிகளவில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றன.
எனவே 2025-2026ஆம் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டு களைவிட சற்று அதிக ரித்தே காணப்படும் என் பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.