கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.5.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து, 5ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்த விழாவில், பல துறைகளின் சார்பில் 390 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
தி இந்து:
*நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்கமளிக்க வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை அரசாங்கம் நடத்தும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திலாவது பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் நம்பிக்கை.
எகனாமிக் டைம்ஸ்:
* அய்.எம்.எஃப். நிதி நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்ட மேனாள் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் புத்தகத்தின் இரண்டு லட்சம் பிரதிகளுக்கு ரூ.7.25 கோடி செலவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆர்டர் செய்த விவகாரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை “வெளிப்படையாக” விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *