கிருட்டினகிரியில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

கிருட்டினகிரி. மே 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-திராவிடர் கழகம் இணைந்து கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி 27/04/2025 அன்று மாலை 3.30 மணிக்கு கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகிக்த்துப் பேசினார்.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன் முடி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் புரட்சிக்கவிஞர் பாடல் வரிகளை வாசித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஊற்றங்கரை ஒன்றியப் பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இராம. சகாதேவன் கருத்தரங்க தொடக்க வுரையாற்றினார்.

விளிம்பு நிலை மக்களுக்கு அம்பேத்கர் அளித்த சட்டப் பாதுகாப்பு என்ற தலைப்பில் பகுத்தறிவு கலைத் துறை மாநிலச் செயலாளர் மாரி. கருணாநிதி, ஒடுக்கப்பட்டோருக்கு அம்பேத்கர் காட்டிய வழிகள் என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணனும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் மனித குலத்தின் மிகச்சிறந்த மனித நேயத்தலைவர் வடநாட்டில் அம்பேத்கர்- தென்னாட்டில் தந்தை பெரியார் இருவரும் ஒரு நாணியத்தின் இருபக்கங்கள் ஒத்த கருத்துக்கொண்ட மிக சிறந்த மனித நேய சமூக புரட்சியாளர்கள் என்பதை எடுத்துக் கூறி கருத்துரை களை வழங்கினர்.

பாவேந்தரின் தமிழின உணர்வு என்ற தலைப்பில் தருமபுரி மேனாள் மண்டலத் தலைவர் பழ. வெங்கடாசலமும், பாவேந்தரின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் மா.சிவசங்கரும்ம் புரட்சிக் கவிஞ ரின் பல்வேறு சமூக சீர்திருத்த கருத்துகளை தனது பாடல் வரிகள் மூலம் மக்களின் அறியாமைகளை அகற்றிய மிக சிறந்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் சிறப்பான கருத்துரைகளை எடுத்துக் கூறினர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கி. முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ. இராசா, பகுத்தறிவாளர் கழக வேப்பனப்பளளி ஒன்றிய நிர்வாகி ஆர்.எம். ஜெயின், பர்கூர் ரெ.அச்சுதன், தருமபுரி சி.சக்திவேல் உள்பட கழகத் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

நிறைவாக பகுத்தறிவாளர் கழக ஒன்றியத் தலைவர் இராம.சகாதேவன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *