ஆளுநர் ரவியை நீக்கக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.22-  ஆளுநர் ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் 20.4.2025 அன்று நடைபெற்றது. மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

26ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநரை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தை எழுச்சியுடன் முன்னெடுத்து வெற்றிபெறச் செய்யுமாறு மதிமுக தோழர்களை இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *