பீகார் மாநிலம் பட்வாதோலி என்ற கிராமத்தில் செயல்படும் பள்ளியில் ஜே.இ.இ. எனப்படும் அகில இந்திய முதன்மைப் பொறியியல் நிறுவனங்களான அய்.அய்.டி மற்றும் என்.அய்.டி.டி. போன்ற நிறுவனங்களில் சேர நடந்த நுழைவுத் தேர்வை எழுதிய 46 தேர்வர்களுமே தேர்ச்சி பெற்றனர்.
கடுமையாக உழைத்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் வாழ்த்துவோம்.
ஆனால் பீகார் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தேர்வு மய்யங்களில் தேர்வு எழுதுகிறவர்களில் சிலர் மட்டுமே தேர்ச்சி அடையும் போது, பட்வாதோலி கிராமப் பள்ளியில் எழுதியவர்கள் அனைவருமே எப்படி தேர்ச்சி பெற்றார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் எழுகின்றன.