சென்னை, ஏப்.15- கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தென்சென்னை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத் திறனாளி களுக்கு ரூ.71.26 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் மொபட்கள் மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிக்கப்பட்ட ரூ.80,995 மதிப்பிலான ஆண்ட்ராய்டு அலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லூர், எஸ்.வி.கணேஷ் நாயக்கர் திருமண மண்டபத்தில் 13.4.2025 அன்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்ேகற்று மொபட்களை வழங்கி பேசியதாவது:
ஆவின் பாலகம்
தென் சென்னை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,67,20,000 பராமரிப்பு உதவித் தெகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் நிதியாண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.3,78,340 வங்கிகடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ.50000 வீதம் 2024-2025ஆம் நிதியாண்டிற்கு வழங்கப் பட்டள்ளது. 3 நபருக்கு ரூ.1,50,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
உதவித் தொகை
மாற்றுத் திறனாளி குழந்தை களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை பயிலும் 1009 மாற்றுத்திறனாளி ரூ.5.90,76,000 கல்வி உதவித்தொகையும், 197 பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.9,35,000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் இணைப்பு பொருத்தப்பட்ட பெட்ரோல் வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,13,78,000 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கப்பட்டுள்ளது.
உபகரணங்கள்
மேலும் மாற்றுத் திறனாளி களுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு குச்சி, பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி, செயற்கைக் கால், கால் தாங்கிகள், காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவி மற்றும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்ட்ராய்டு போன், ஆகிய உதவி உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளி களுக்கு ரூ.32,20,526 வங்கிகடன் மானியம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.5.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 37,864 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சேழிங்கநல்லூர் மண்டல குழுத் தலைவர் மதியழகன், பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.