சிறீநகர், ஏப். 13- வக்பு திருத்தச் சட்டத்தை கொள்கை ரீதியாக எதிர்த்து குரல் கொடுத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வக்பு திருத்தச் சட்டத்துக்கு ஆரம்பம் முதலே உறுதியான, கொள்கை ரீதியிலான எதிர்ப்பை தெரிவித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும்,பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் மாநிலத்தில் கூட இப்படி ஒரு நிலைப்பாட்டை ஆளும் கட்சி எடுக்காதபோது, தங்களின் உறுதியான நிலைப்பாடு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாவுக்கும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் மெகபூபா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.