சென்னை, ஏப்.8 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (8.9.2025) அமலுக்கு வருகிறது.
பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன.கடந்த 2024 மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதனால், எரிவாயு உருளை விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது. கடந்த ஓராண்டில் வர்த்தக உருளை விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், வீட்டு உபயோக உருளை விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளையின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.
கோடை மழை காரணமாக தமிழ்நாட்டின் மின் தேவை
3500 மெகாவாட் குறைந்தது
சென்னை, ஏப்.8 தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு 16ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர் காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித் தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ஆம் தேதி, தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கோடைகாலம் தொடங்கி உள்ளதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள் ளிட்ட மின்சாதனங்களின் பயன் பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி 19 ஆயிரம் மெகா வாட்டை எட்டியது. இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவு இது வாகும். இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தினசரி மின்தேவை 3,500 மெகாவாட் குறைந்து 15,500 மெகாவாட் குறைந்து என்றஅளவில்உள்ளது. வரும் மே, ஜூன் மாதங்களில் தினசரி மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.