புரட்சிக் கவிஞர் நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம்

புதுச்சேரி, ஏப். 24- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 63ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

முன்னதாக 21.4.2026 அன்று காலை 10.00 மணியளவில் முத்தி யால் பேட்டை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவிடத்தில் மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் நினைவு இல்லத்தில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் தி.இராசா, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், முப்பால் இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர். கோ.கலியபெருமாள், நெட்டப்பாக்கம் கொம்யூன், ஏம்பலம் தெ.தமிழ் நிலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *