குளச்சல், ஏப். 4- கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது.
கழக தோழர் நெய்யூர் தா. ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.
கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்பிரமணியம் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். குருந்தன்கோடு ஒன்றிய திக செயலாளர் ஆ.சிவகுமார், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் எம். பெரியார் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உரத்தநாடு
இரா.குண சேகரன்
திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரன், திராவிடர்கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்பு ரையாற்றினார்.தோழர்கள் கலைப்பிரியன், இஸ்மாயில் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்
தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமய மாக்க ஓயாது உழைக்கும் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துக்களை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது,
கழக பொதுக் கூட்டங்கள் நெய் யூர், திங்கள்நகர், கடியப் பட்டணம் பகுதியில் நடத்துவது, பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பெரியாருடைய கருத்து களை தெரிவிக்கும் வகையில் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துவது, தமிழ் நாட்டு அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கும், ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது, திங்கள்நகர், இரணியல், நெய்யூர் பகுதியில் மின் விளக்குகளை சரியாக இயங்க வைக்கவும், பேரூராட்சி சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் அந்தந்த பேரூராட்சி செயல்அலுவலர்களைக் கேட்டுக்கொள்வது, நாகர் கோவில், திங்கள் நகர், கருங்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க நெடுஞ் சாலைத்துறையைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தோழர்கள் த..ஜெகதீஸ் வரி, ஜெ.ஜெபிஷா, சங்கீதா, ராஜகோபால், பெரியார் பிஞ்சுகள் ஜெ.தீபிகா, சிறீகரீஸ், பவித்திரா, ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குமரி மாவட்ட மாணவர் கழக செயலாளராக ஜெ.ஜெபிஷா தேர்வு செய்யப்பட்டார்.
குருந்தன்கோடு ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்

Leave a Comment