மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வு 4 நாட்களுக்குப் பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு

viduthalai
2 Min Read

மண்டலே, ஏப்.2- மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர். 4 நாட்களுக்கு பின் உயி ருடன் மீட்கப்பட்டுள் ளார். இதற்கிடையே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-அய் கடந்துள்ளது.

நில நடுக்கம்

மியான்மர் நாட்டில் 28-ஆம் தேதி மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட் டது. நாட்டின் 2-ஆவது பெரிய நகரான மண்டலேவுக்கு அருகே மய்யம் கொண்டி ருந்த அந்த நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்கு மாடி குடி யிருப்புகளை அடியோடு சாய்த்தது.

விமான நிலை யம், சாலைகள் பாதிக்கப் பட்டன. பல்லாயிரக் கணக்கான வீடுகள் உருக்குலைந்தன. தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற் பட்ட கட்டடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மய்யம் அறிவித்து உள்ளது. வீடுகளை இழந்தவர்கள் வீதியில் படுத்து தூங் குவதும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லல் படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 31.3.2025 வரை 2 ஆயிரத்து 65 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. நேற்று (1.4.2025) இந்த இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-அய் கடந்துள்ளது.

இது தொடர்பாக, மியான்மர் நாட்டின் ராணுவ அரசாங் கம் வெளியிட்ட அறி விப்பில் 2,719 பேர் இறந்துவிட்ட தாகவும், 4,521 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 441 பேர் காணாமல் போனதாகவும் கூறி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு நாடுகளின் பங்களிப்புடன் நிலநடுக்கம் ஏற்பட்ட நரங்களில் மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின் றன. நேற்று தலைநகர் நேபிடாவில் 63 வயது மூதாட்டி ஒருவரை, மீட்புக் குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதேநேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பல பகுதிகளை மீட்புகுழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண் ணிக்கை இன்னும் உயரக் கூடும் என்று அஞ்சப்படு கிறது.

தாய்லாந்து

மியான்மரில் மய்யம் கொண்டிருந்த நிலநடுக்கம் அண்டைநாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரையும் உலுக்கியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து ஏராளமானவர்கள் காணாமல் போனார்கள். நேற்று முன்தினம் வரை இங்கு 18 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். நேற்று மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 34 பேர் காயம் அடைந்துள்ள னர். இன்னும் 78 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன வர்களின் உறவினர்கள், இடிந்த கட்டடத்தின் அருகே காத்துக் கிடக்கி றார்கள். தெருவில் தூங்கு கிறார்கள். தங்கள் குடும்பத்தினர் மீட்கப்படு வார்களா, உயிருடன் வந்துவிடுவார்களா, சடல மாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பரிதவிப்பில் நிற்பது பார்ப்பவர்களின் கண்களை கலங்கச்செய்வ தாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *