ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

1 Min Read

சென்னை, மார்ச் 29- பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா்.
இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த வாட்ஸ்ஆப் குழு தொடங்கப் பட்டுள்ளது.
இக்குழுவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 57 ரயில்வே காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் மற்றும் பெண் காவலா்கள் இணைக்கப் பட்டுள்ளனா்.
பெண் பயணிகள் ரயில்வே காவல் நிலையங்களில் தங்களது கைப்பேசி எண், வழக்கமாக பயணம் மேற்கொள்ளும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதன்மூலம் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், குற்றச் செயல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவற்றை இக்குழுவில் பதிவிடுவதன் மூலம் காவல் துறையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *