தமிழ்நாட்டில் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் தேர்வு வாரியம் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 28- ஆசிரியர் தேர்வு வாரியம் 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண் டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கான நாட்காட்டியை அவ்வப் போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவேற்றம் செய்யும்.

ஆனால் நீண்ட காலமாக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளி யாகாமல் இருந்து வந்தது. குறிப்பாக 2024சூம் ஆண்டில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள், 2768 இடை நிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 4000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், 56 சட்டக்கல்லூரி உத விப் பேராசிரியர்கள் உள் ளிட்ட 10, 355 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந் தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்து.

இந்த நிலையில் 26.3.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது. 2700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே கூடுதலாக அறிவிக்கப்பட்ட 1000 இடங்களுக்கு தற் போது இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக 2700 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *