ஆன்லைன் ரம்மி குறித்து தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்ததில் எந்தத் தவறும் இல்லை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

2 Min Read

சென்னை, மார்ச் 28 ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக் கும் வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு கடந்த பிப்.14-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடக்கூடாது என நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு

இதை எதிர்த்து தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவ னங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹ்தகி, சஜ்ஜன் பூவையா ஆகியோர் கார் ரேஸ், வீடியோ கேம், கேண்டி க்ரஷ் போன்ற விளையாட்டுகளை ஆன் லைன் மூலமாக விளையாட முடியும் என்ற நிலையில், ரம்மிக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட தமிழ்நாட்டை தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் தடை இல்லை. இந்த 5 மணி நேரம் ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இது எங்களின் தொழில் உரிமையை பாதிக்கிறது. ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. ஒன்றிய அரசுக்கே உள்ளது. 5 மணி நேரம் விளையாடக்கூடாது என்பது தடை விதிப்பதுதானே தவிர, ஒழுங்குபடுத்துதல் ஆகாது என வாதிட்டனர்.

தவறு இல்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற ஆன்லைன் விளை யாட்டுகளால் யாரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனமுடைவதில்லை. ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்து பலர் நிர்கதியாகி விட்டனர். ஆன்லைன் ரம்மியில் தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறதே என்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு தனது மாநில எல்லைக்குள் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் தனியாக சட்டம் கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடிமைப்படுத்தும் வகையில் இருப்பதில்லை. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளது என கருத்து தெரிவித்து விசாரணையை மறுநாளைக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *