தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்
சென்னை, மார்ச் 27– சிறுபான்மை மக்களான இஸ்லாமி யர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (27.3.2025) முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:.
தீர்மானம்
இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995 ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்தார்.
இத்தீர்மானத்திற்கு அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.