சென்னை ஜூலை 8 – புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. புதிரை வண்ணார் நல வாரியம் சார்பில், அந்த சமூகத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை தயாரிக் கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணையதளம் உருவாக்குதல், தொழிற்பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக் கப்பட உள்ளன. மேலும், பல்வேறு நலத்திட்ட உதவி களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.