நகராட்சி – பேரூராட்சி – ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

1 Min Read

திருவள்ளூர், மார்ச்25- 9.3.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துவக்கவுரை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கருத்துரை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் சிதம்பரத் தில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைத்தல் என தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் சீ.நி.வீரமணி, மா.தலைவர் ப. க. ந.ரமேஷ் (மா துணை செயலாளர்), க.ஏ. மோகனவேலு பொதுக் குழு உறுப்பினர் பாடகர் ந.பன்னீர் செல்வம், க.ஏ.தமிழ்முரசு, தி.சுந்தரம், சத்ரஞ்செயபுரம் மணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் இரா.ஸ்டாலின் நன்றியுரை கூறினார்.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *