தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆஸ்திரேலியா பயணம் மாபெரும் வெற்றி! வந்தார்! கண்டார்!! வென்றார்!!!
தோழர் மகிழ்நன் சேலம் அண்ணாமலையார் அவர்களது புதல்வர். அம்மா அருள்மொழியின் அண்ணன். இவர்களது சிறப்பு ஏற்பாட்டில் ஆஸ்தி ரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்போர்ன், பிரிசுபேன் நகரங்களில் கூட்டங்கள் சிறப்பாக நடந்தன. உழைத்த, ஒத்துழைத்தத் தோழர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த
பாராட்டுக்கள்!
மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மெய்நிகர்(சூம்) வழியில் நடந்தது. மகிழ்நன் அனைவரையும் பாராட்டி ஒவ்வொருவரையும் அழைத்துக் கருத்துக்களைக் கேட்டார். ஆசிரியர் அவர்கள் அனைவரையும் பாராட்டி சிறப்புக்களைப் பற்றிப் பேசினார் . ஆங்காங்கே இவ்வளவு தோழர்கள் ஆர்வத்துடன் சிறப்பாகப் பணியாற்றி யதை மீண்டும் பாராட்டினார்.
பெரியார் பன்னாட்டு மாநாடுகள் பற்றிப் பேசி மாநாடு நடத்தவேண்டிய செயல்பாடுகள் பற்றிப் பேசினார். தோழர் சுமதி அவர்கள் அய்யாவுடன் கூடவே இருந்த இனிமையான நினைவுகளை, அவரிடம் கற்றுக்கொண்ட பாடங்களை விரிவாக மன நிறைவுடன் பேசியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
மகிழ்நன் ஒவ்வொருவராகப் பாராட்டி அவர்களது கருத்துக்களையும் எதிர்காலத்து மாநாடு மற்ற தொடர் ஏற்பாட்டுகளைப் பற்றிப் பேச வைத்தார். தோழர்கள் ஹரூன், மூர்த்தி, ராதிகா,சுரேசு, தேவி,முகுந்த், பிரதாப், பொன்ராஜ்,திருமலைநம்பி,பார்த்திபன், தாயுமான் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
உலக மாநாடு நடத்துவது மற்ற செயல்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பெரியார் உலக மயமாகின்றார், உலகம் பெரியார் மயமாகின்றது என்பதைப் பறை சாற்றியது! வாழ்க பெரியார்! வாழ்க ஆசிரியர்! வளர்க பகுத்தறிவு!
– சோம. இளங்கோவன்