வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

viduthalai
1 Min Read

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

தொடர்ந்து டில்லி யில் 9 வங்கி ஊழியர் களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று (22.3.2025)பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப் போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர் பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரி வித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *