அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

2 Min Read

அரசு, தமிழ்நாடு

திருச்சி, ஜூலை 9 – அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நேற்று (8.7.2023) நடைபெற்றது.  

கூட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூடுதல் அரசுச் செயலர் பிர தீப் யாதவ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைர மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில்,

 “திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு 2,227 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம்  ஏற்பட்ட விபத்துகள், 1,208. இவ் விபத்துகளில் திருச்சி மாநகரத்தில்  150 பேரும், மாவட்டத்தில் 540 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர, எந்த வாகனத்திலும் செல்லாத 118 பாதசாரிகளும் உயிரிழந்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் ‘ஹாட்  ஸ்பாட்டுகள்’ பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், விபத்துகள் ஏற்படும் இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்துகின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் விபத்துகள் நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,

“அலைபேசியில்  பேசிக் கொண்டே செல்பவர்கள், தலைக்கவசம் அணி யாமல் செல்பவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகளவு மாணவர் களை ஏற்றிச்  செல்லும் ஆட்டோக்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து படிக்கட்டில் யாரும் பயணிக்காத நிலையை ஏற் படுத்த வேண்டும். சாலைகளில் மாடு களை அவிழ்த்து விடுவதால் பல  நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின் றன. மாவட்ட நிர்வாகம் மாட்டைப் பிடித்து இருமுறை அபராதம் விதிக்க வேண்டும். இதை மீறினால், மாட்டை ஏலம் விட்டு அரசு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *