அக்கம் பக்கம் அக்கப் போரு!

1 Min Read

பிச்சைக்காரர்கள் அதிகம் எந்தெந்த மாநிலங்களில்?

2018 மார்ச் 20 அன்று, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் (பா.ஜ.க.) மக்களவையில் எழுத்து வடிவில் அளித்த பதிலில் 2011-ஆம் ஆண்டு கணக்குப் படி, மாநில வாரியாக பிச்சைக்காரர்கள் மற்றும் எண்ணிக்கை (10000-க்கு மேலே உள்ள மாநிலங்கள்)
மேற்கு வங்கம் – (81,244)
உத்தரப் பிரதேசம் – (65,835)
ஆந்திரப் பிரதேசம் – (30,218)
பீகார் – (29,723)
மத்தியப் பிரதேசம் – (28,695)
ராஜஸ்தான் – (25,853)
மகாராட்டிரா – (24,307)
அசாம் – (22,116)
ஒடிசா – (17,965)
குஜராத் – (13,445)
கருநாடகா – (12,270)
ஜார்க்கண்ட் – (10,819)
சத்தீஸ்கர் – (10,198)
இந்தியாவின் அப்போதைய மொத்த பிச்சைக் காரர்களின் எண்ணிக்கையான 4,13,670-இல் இந்த 13 மாநிலங்களும் 90.9 சதவீத (372,688) பிச்சைக்காரர்களைக் கொண்டுள்ளன.
ஒரு வேளை இந்தப் பட்டியலை இப்போது எடுத்தால், 11 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் தெரியும். இவற்றில் பெரும்பாலானவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் (உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர்) என்பது குறிப்பிடத்தக்கது.
“க்யா ஆப்கோ பதா ஹை கி ஹிந்தி சீக்னே சே ஆப்கே ஜீவன் பெஹ்தர் கைசே ஹோ சக்தா ஹை?” (நீங்கள் ஹிந்தி கற்றால் எப்படி நன்றாக வாழலாம் தெரியுமா?)
ஜீ… முதல்ல உங்க மாநிலங்களைப் பாருங்க!

– குப்பைக் கோழியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *