தண்டலம் ராமு அம்மா படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தண்டலம், மார்ச் 15– 12-03-2025 அன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் இலுப்பைதண்டலம் கிராமத்தில் ஓய்வு பெற்ற பிஎஸஎன்எல் சின்னதுரையின்வாழ்விணையர் ராமு அம்மா மறைவை ஒட்டி நினை வேந்தல் படத்திறப்பு, அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாள், திராவிடர் கழக கொடி ஏற்றம், கிளைக் கழகம் தொடக்கம் ஒருங்கினைத்து மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.45 க்கு முடிவுற்றது.

சு.லோகநாதன் தலைமையில் சிங்கப்பூர் சங்கர் வரவேற்க .ஜீவன்தாஸ், சு.சங்கர், க.சு.பெரியார் நேசன், கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.அறிவுச்செல்வன், ந.இராமு, போ.பாண்டுரங்கன், கல்லாறு அன்பு, ஏ.ஞானப்பிரகாசம்,ஆகியோர் முன்னிலை ஏற்க கழக கொடியை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஏற்றிவைக்க, ராமு அம்மா அவர்களின் படத்தை திருவள்ளுர் மாவட்ட தலைவர் மா.மணி திறந்து வைத்தார்.,அன்னை மணியம்மையார் படத்தை ஆர்.சின்னதுரை திறந்து வைக்க, ம.தி.மு.க. கெ.ஆறுமுகம், ரவிபாரதி, காஞ்சி மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, மாநில மகளிரணி தகடூர் தமிழ்ச்செல்வி, பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன், ஆகியோரின் உரைக்கு பிறகு கழக பேச்சாளர் ஆரூர்.தேவ.நர்மதா நினைவேந்தல் சொற் பொழிவாற்றினார். இறுதியாக சின்னதுரை நன்றிகூறி நிகழ்ச்சி யை முடித்து வைத்தார். நிகழ்வில் காஞ்சி மாவட்ட செயலாளர் கி.இளையவேல்,காஞ்சி மாவட்ட ப.க.செயலாளர் இளம்பரிதி,காஞ்சி தோழர் அருண்குமார்,ஆகியோர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை தலைமைசெயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *