கியாஸ் சிலிண்டர் தொடர்பான தொலைபேசி அழைப்பில் ஹிந்தியில் மட்டுமே பதிலாம் நவீன வகை ஹிந்தித் திணிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி

1 Min Read

சென்னை, மார்ச் 14 ஹிந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையை வழங்குவது என்பது எரிவாயு நிறுவனங்களின் நவீன வகை ஹிந்தித் திணிப்பாகும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்ய முடியவில்லை.
எரிவாயு நிறுவனங்களான, இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மய்யத்துக்கான இலவச தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுகின்றன.
இதுவும் ஒருவகை நவீன இந்தித் திணிப்பே ஆகும். இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வணிகம் செய்துவரும் நிலையில், தமிழ் மொழியில் சேவையை வழங்க வேண்டும். ஆனால் இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால், மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களிலும், ஆங்கிலத்திலும் பதில ளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் ஹிந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாடு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஹிந்தித் திணிப்பை கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

கண்டனம்

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறும்போது, எரிபொருள் நிறுவனங்களின் கட்டணமில்லா உதவி எண்ணில் புகார் பதிவு செய்வோருக்கு ஹிந்தி யில் மட்டுமே பதில் அளிக்கப் படுவதால் தமிழ்நாடு மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை விருப்பங்களாகத் தேர்ந்தெடுத்தாலும், எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்கிறார்கள். ஹிந்தியைத் திணிக்கும் எண் ணெய் நிறுவனங்களின் இந்த ஆதிக்க உணர்வுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *