சட்டப்படி பெண்கள் தங்கள் கனவுகள், விருப்பங்கள், ஆசைகளை தொடரலாம் டில்லி நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 11 – டில்லி சதர் பஜாரில் உள்ள ஒருவர் தனது கடையை வாடகைக்கு எடுத்திருப்போரை காலி செய்ய உத்தரவிடக்கோரி உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவரது மனைவி ஓட்டல் வர்த்தகத்தில் சம்பாதிப்பதாகவும், அது குறித்து வழக்கில் தெரிவிக்கவில்லை என்பதும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அவரது மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதை எதிர்த்து டில்லி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, வாடகைதாரர் கடையை காலி செய்ய உத்தரவிட்டார். உரிமையாளரின் மனைவி தனது தொழில் மற்றும் வரு வாயை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒரு மனைவி என்பவர் கணவனுக்கு வெறும் துணையோ, இணைப்போ கிடையாது. அவ ளுடைய அடையாளம் கணவரின் அடையாளத்துடன் இணைவதோ அல்லது தொகுப்பதோ இல்லை. சட்டப்படி அவள் தன் கனவுகள், விருப்பங்கள், ஆசைகளை தொடரலாம். நிதி ரீதியாக தற்சார்பாக இருக்க வேண்டும் அல்லது சில அர்த்தமுள்ள சமூகப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற இயல்பான உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறாள்’ என்று தெரிவித்தார்.

மனைவி தன் கணவனுக்கு அடிபணிந்தவளாக இருப்பாள் என்றும், அவளுடைய எல்லா நிதி விவரங் களையும் கணவனிடம் தெரிவிக்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கடமைப்பட்டிருக்கிறாள் என்றும் அனு மானிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *