குடும்பமே அழிந்தது.. இது ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை

1 Min Read

ஆன்லைனில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி தலைமறைவான பிரேம் என்பவரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்துகொண்டனர். இதைக் கேட்டு இதற்குமேல் வாழ்ந்து என்ன செய்வது என நினைத்த பிரேம் கரூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். மக்களே உயிர் விலைமதிப்பற்றது. அதை உணர்ந்து இதுபோன்று கடன் வாங்குவதை தவிர்த்து, குறைவான வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை வாழுங்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பெண் கவுன்சிலர்களுக்கு பதில் கணவர்களுக்கு பதவிப் பிரமாணமாம்!

சட்டீஸ்கரில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில், அவர்களது கணவன்மார்கள் பதவிப்பிரமாணம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபீர்தாம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் 11 வார்டுகளில் 6 பெண்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *